என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Monday, June 23, 2014

மெலிதான நேசம்

உள்ளத்தில் தோன்றும்
தா(க்)கத்தை
போக்கும் வழி என்னவோ?
நெஞ்சில் தோன்றும் துன்பத்தை
தீர்க்கும் வழி என்னவோ?

தண்ணீர் இல்லாத காட்டுக்குள்
தயக்கமின்றி செல்லுவதா?
சாத்தான்கள் இருக்குமிடத்தில்
சத்தியத்தை வெல்லுவதா?

மனசில் எரியும் அக்கினித் தீ
மார்பு வலிக்கச் செய்கிறது..
ஆறுதலுக்கு ஆட்களின்றி
அழுகை வந்து கொல்கிறது!

பாசத்துக்கும் பொறாமைக்கும்
வித்தியாசம் தெரிகிறது..
பாசம் என்பதன் வெள்ளை நிறம்
இப்போது எனக்கு புரிகிறது!

ஆதலால்

அன்பு என்பதன் ஆழ வேர்
அடி மனசில் வளர்கிறது..
மிக மெல்லிய நேசமொன்று
எனக்குள்ளே மலர்கிறது!

எனைப் பிடித்த சோகமெல்லாம்
மெதுமெதுவாய் தேய்கிறது..
அலையடித்த சந்தேகங்கள்
அடியோடு ஓய்கிறது!!!