என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Tuesday, April 8, 2014

அல்லாஹ்வின் சந்நிதானத்தில்

தங்கையே
ஒரு கிராமத்து நதியின்
குளிர்ச்சியாக நீ
எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கின்றாய்..

ஒரு நிலாக்கீற்றின்
ஒளி போல - நீ
நீங்கிச் சென்றாலும்
எமக்குள் வாழ்கின்றாய்..

வசந்த காற்று வீசும்
இடத்தில்
ஒரு தென்றலாக
நினைவில் மலர்கிறாய்..

உலகத்தின் அழுக்குகளை
காணக் கூடாதென்றா
கண்மூடிக்கொண்டாய்?

பாவம் செய்யும் நீசர்களின்
முகத்தில் விளிக்க வேண்டாமென்றா
விழி திறக்குமுன்னேயே
உயிர் நிறுத்திக்கொண்டாய்?

நாளை மறுமையில்
சுவர்க்கத்தின் வாசலிலே
ஒரு குழந்தை தேவதையாக
நீ எங்களை
அழைத்துப்போவாய்

அங்கே
நாங்களெல்லாம்
ஒன்றாயிருந்து

உம்மம்மாவின் மடியில்
சாய்ந்திருக்கலாம்
அப்பாவுடனிருந்து
கதைகள் கேட்கலாம்..

நான் .. நீ
உம்மா.. வாப்பாதம்பி.. தங்கை என்ற
நமது குருவிக் கூட்டுக் குடும்பம்
அல்லாஹ்வின் சந்நிதானத்தில்
சந்தோஷமாயிருக்கலாம்!!!