என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Thursday, January 16, 2014

அன்புத் தோழிக்கு

நீ என்மீது
அளவு கடந்த அன்பை காட்டியபோது
என்னால் அதனைப் புரிந்து கொள்ள
இயலவில்லை

அடிக்கடி வருகின்ற
உன் மெஸேஜ்களும்
மிஸ்கோல்களும்
நான் உன்னிடம் பேசாதபோது
நீ கொண்ட கோபமும்
உண்மையில் என்னை
எரிச்சல் அடையவே செய்தன

எனது அன்பை வழிபார்த்து
நீ காட்டிய பாசத்தின் தடயங்கள்
அப்போதெல்லாம்
என் இதயத்தில் பதியவேயில்லை

உன்னை சந்தித்த தருணத்தில்
உன்னிடம் ஏற்பட்ட
அந்த அன்பு கூட
காலப்போக்கில்
காணாமலேயே போனது

கண்ணில் காணாத பொருள்
கருத்திலிருந்து மறையும்
என்ற கூற்றுக்கிணங்க
உன்னை நான்
மறந்தே போனேன் தெரியுமா?

ஆனால்

இன்று
நானும் உன்னைப் போல
ஒரு அன்புக்காக ஏங்குகின்றேன்
உன்னைப் போலவே
மெஸேஜ் பண்ணுகிறேன்
அடிக்கடி மிஸ்கோல் கொடுக்கிறேன்..

நான் எப்படி உன்னை
தவிர்த்துவிட்டேனோ
அதைப் போலவே
இல்லையில்லை
அதையும்விட இப்போது
தவிர்க்கப்படுகிறேன்

என்னில் பாசம் காட்டாத இடத்தில்
நான் வைத்த அன்பு
கண்டுகொள்ளப்படாமல்
அந்தரத்தில் இருக்கிறது

அதனால்தான்
நீ கொண்ட அன்பின் ஆழத்தையும்
பிரிவின் நீளத்தையும்
காலம் இப்போது
நன்றாகவே புரிய வைத்திருக்கிறது!!!