மறந்து போனேன் எல்லாமே..
என் இயல்பை
என் இருப்பை..
உன்னை
உன் அன்பை..
எல்லாமே மறந்துபோனேன் இன்று!
எனக்கு என்ன ஆயிற்று?
ஏன் இப்படிக் கோபப்படுகின்றேன்
தனிமையை விரும்புகின்றேன்
சந்தோசத்தைத் தொலைக்கிறேன்..
உனது அருகாமை தந்த
அந்த இன்பம்
இன்று இன்பமாக இருக்கவில்லை..
என் கண்கள் கலங்குகின்றது
தொண்டை அடைக்கிறது
அழ வேண்டும்போல் தோன்றுகிறது
இதயம் விம்மி வெடிக்கின்றது!
என்னைப் புரிந்து கொள்ள
அவசியங்கள் இங்கில்லை..
ஆனால்
என்னை பிழிந்து கொல்ல
அதிகாரம் தந்தது யார்?
உன்னால் மட்டுமே பிடிக்கும் வாலிபம்
இன்று
ஏனோ வெறுத்தே போனது!
நீ சொல்வாயே அடிக்கடி
பச்சோந்திகள் பதுங்கியிருக்கும்
உலகம் இதுவென்று
உண்மைதான்!
அன்பின் விலாசம்
திசை தெரியாமல் போனது
சாப்பிடும் போதும்
மன இறுக்கம் இருந்தது
எதிர்பார்ப்புகள் எல்லாம்
ஏமாற்றம் அடைந்தால்
அன்பின் முகவரியும்
அழிந்தல்லவா போய்விடும்?
அகத்தில் உள்ளதை
முகத்தில் கண்டுவிட்டாய்
மறக்க முயன்றும்
தோற்றுத்தான் போனேன்
பயமாயிருக்கின்றது
என் வாழ்க்கை முழுவதும் இப்படி
தோற்றுப் போவேனோ என்றெண்ணி!
சுயநல வேட்கையில்
சுற்றியிருக்கும் சொந்தங்கள்
எதிரியை மட்டுமல்ல
எதிரே இருப்பவரையும் குறிபார்க்கிறது..
கழித்தது எப்படியோ நீ
கடந்த காலங்களை..
வாழ்வென்றால்
ஆயிரமிருக்கும் என்று
நீ வார்த்தையில் சொல்லிவிடலாம்
ஆனால்
காயப்பட்ட உள்ளத்துக்கும்
சாயம்போன இதயத்துக்கும்தான் தெரியும்
வலியின் ஊடுறுவல்கள்!!!
என் இயல்பை
என் இருப்பை..
உன்னை
உன் அன்பை..
எல்லாமே மறந்துபோனேன் இன்று!
எனக்கு என்ன ஆயிற்று?
ஏன் இப்படிக் கோபப்படுகின்றேன்
தனிமையை விரும்புகின்றேன்
சந்தோசத்தைத் தொலைக்கிறேன்..
உனது அருகாமை தந்த
அந்த இன்பம்
இன்று இன்பமாக இருக்கவில்லை..
என் கண்கள் கலங்குகின்றது
தொண்டை அடைக்கிறது
அழ வேண்டும்போல் தோன்றுகிறது
இதயம் விம்மி வெடிக்கின்றது!
என்னைப் புரிந்து கொள்ள
அவசியங்கள் இங்கில்லை..
ஆனால்
என்னை பிழிந்து கொல்ல
அதிகாரம் தந்தது யார்?
உன்னால் மட்டுமே பிடிக்கும் வாலிபம்
இன்று
ஏனோ வெறுத்தே போனது!
நீ சொல்வாயே அடிக்கடி
பச்சோந்திகள் பதுங்கியிருக்கும்
உலகம் இதுவென்று
உண்மைதான்!
அன்பின் விலாசம்
திசை தெரியாமல் போனது
சாப்பிடும் போதும்
மன இறுக்கம் இருந்தது
எதிர்பார்ப்புகள் எல்லாம்
ஏமாற்றம் அடைந்தால்
அன்பின் முகவரியும்
அழிந்தல்லவா போய்விடும்?
அகத்தில் உள்ளதை
முகத்தில் கண்டுவிட்டாய்
மறக்க முயன்றும்
தோற்றுத்தான் போனேன்
பயமாயிருக்கின்றது
என் வாழ்க்கை முழுவதும் இப்படி
தோற்றுப் போவேனோ என்றெண்ணி!
சுயநல வேட்கையில்
சுற்றியிருக்கும் சொந்தங்கள்
எதிரியை மட்டுமல்ல
எதிரே இருப்பவரையும் குறிபார்க்கிறது..
கழித்தது எப்படியோ நீ
கடந்த காலங்களை..
வாழ்வென்றால்
ஆயிரமிருக்கும் என்று
நீ வார்த்தையில் சொல்லிவிடலாம்
ஆனால்
காயப்பட்ட உள்ளத்துக்கும்
சாயம்போன இதயத்துக்கும்தான் தெரியும்
வலியின் ஊடுறுவல்கள்!!!