என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, December 25, 2013

என்னவென்று தெரியவில்லை

என்னவென்று தெரியவில்லை
ஒருநாளும் இல்லாமல்
இன்று நேரகாலத்துடன்
போக வேண்டும்
போல் இருக்கின்றது

தலையணையில்
முகம் புதைத்து
அழுது தீர்க்க வேண்டும்
போலிருக்கின்றது

நண்பர்களிடமெல்லாம்
மன்னிப்பு கேட்டு
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
போலிருக்கின்றது

எங்கள் வீட்டுக்குப் போய்
உம்மாவின் மடியில்
தலை வைத்துப் படுக்க வேண்டும்
போலிருக்கின்றது

வாப்பாவுடன் எல்லோரும் அமர்ந்து
அனைவரும் ஒன்றாக சாப்பிட வேண்டும்
போல் இருக்கின்றது

மீண்டும் சிறுகுழந்தையாய் மாறி
என் தம்பி, தங்கையுடன்
செல்லச் சண்டை போட வேண்டும்
போலிருக்கின்றது

இந்த உலகத்தையே மறந்து
பட்டாம்பூச்சி பிடித்து
விளையாடிக் களைக்க வேண்டும்
போலிருக்கின்றது!

கடற்கரைக்குச் சென்று
கடலிடம் என் சோகங்களை
கத்திச் சொல்ல வேண்டும்
போலிருக்கின்றது

யார் கண்ணிலும் படாமல்
யாருக்கும் வலி கொடுக்காமல்
செத்துப் போக வேண்டும்
போலிருக்கின்றது