யாரது...?
எதை எதிர்பார்த்தவளாய்
வீதியோரமாய்க் கிடக்கிறாள்?
அவள்
பெற்றோரின் அன்புக்காய்
ஏங்கியவளா?
சகோதரப் பிணைப்பைக்
காணாதவளா?
காதல் கொண்டு
ஏமாற்றம் அடைந்தவளா?
நட்பெனும் வேஷ வலையில்
சிக்கி சீரழிந்தவளா?
ரோசம் கெட்டு
பாசம் தேடுபவளா?
இரக்கத்துக்காக - கண்
உறக்கம் மறந்தவளா?
நேசத்துக்காக - நெஞ்சில்
நெருப்பள்ளிப் போட்டவளா?
அன்பு பொய் என்பதை
அனுபவித்தும் அறியாதவளா?
வாழவும் சாகவும்
கொடுப்பனமில்லாதவளா?
செத்தாலும் தனியாய் அழுகும்
அநாதைப் பிணம் அவளா?
யாரது...?
எதை எதிர்பார்த்தவளாய்
வீதியோரமாய்க் கிடக்கிறாள்?