என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, August 10, 2012

தெருப் பிச்சைக்காரி


யாரது...?

எதை எதிர்பார்த்தவளாய்
வீதியோரமாய்க் கிடக்கிறாள்?

அவள்
பெற்றோரின் அன்புக்காய்
ஏங்கியவளா?
சகோதரப் பிணைப்பைக்
காணாதவளா?

காதல் கொண்டு
ஏமாற்றம் அடைந்தவளா?
நட்பெனும் வேஷ வலையில்
சிக்கி சீரழிந்தவளா?

ரோசம் கெட்டு
பாசம் தேடுபவளா?
இரக்கத்துக்காக - கண்
உறக்கம் மறந்தவளா?

நேசத்துக்காக - நெஞ்சில்
நெருப்பள்ளிப் போட்டவளா?
அன்பு பொய் என்பதை
அனுபவித்தும் அறியாதவளா?

வாழவும் சாகவும்
கொடுப்பனமில்லாதவளா?
செத்தாலும் தனியாய் அழுகும்
அநாதைப் பிணம் அவளா?

யாரது...?

எதை எதிர்பார்த்தவளாய்
வீதியோரமாய்க் கிடக்கிறாள்?