காதலின்
மொத்த உருவானவளே..
இன்பங்கள ;பிரசவமாகிட
கருவானவளே...
சொற்ப கால உறவில்
சிற்பமாய் நீ எனக்குள்!
உன் மலர்பதங்களை
என் இதயம் தாங்குவதால்
நீ நடந்தாலும்
வலியிருக்காது பாரேன்!
என் கைகளோ
தூக்கத்தின் இடைவெளியிலும்
உன்னை தேடுகிறது...
நீ
இல்லாததை அறிந்து கொண்டு
மனசு கடுமையாய் வாடுகிறது!
புரிந்து கொள்!
மீண்டும் மீட்டிக்கொள்ளவே
தேவையில்லாதபடிக்கு
உன்னிடம் அடகு வைத்திருக்கிறேன்
என் மனசை..
காலம் முழுதும் காப்பாற்றித்தா!!!