என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, June 30, 2010

சுழியோடும் இதயம் !



நின்னை நான் நினைத்தது
நீ செய்த பிழையில்லை...
உன் மனசை நாடினேனே
எனக்குத்தான் தலையில்லை!

அகம் கேட்டுப் பழகினேன்-உடல்
சுகம் ஒன்றும் தேவையில்லை...
உன் அலட்சியங்களை தாங்கிட
என் இதயம் ஒன்றும் பாலையில்லை!

உன் இதயத்துக்குள் வந்த நான்
இடையிலேயே போகிறேன்....
மீதியுள்ள வாழ்நாளில்
தனியாகவே சாகிறேன்!

ஈரமுள்ள நெஞ்சுக்குத் தான்
இதயத்தில் வலியெடுக்கும்....
அன்பு நதியில் நீச்சலடித்தால்
இறக்கும் வரை சுழியடிக்கும்!